Wednesday, July 15, 2009

படிச்சதில், கேட்டதில், பிடிச்சது


1) அக்பர் பாபருக்கு மட்டுமல்ல ஒரு சின்ன தக்காளிக்கு கூட தனிச் சரித்திரமிருக்கிறது

துணையெழுத்து என்னும் நூலில் உள்ள வரிகள். படிச்ச உடனே மனதில் பதிந்து விட்டது
2)Yes. But is that your question

நேரடியாய் விஷயத்த கேட்டக தெரியாம எதையோ பேசுகிறவர்களுக்கு இது புரியும்
3) The Best way to predict the future is to invent it

எத்தனையோ இடத்தில படித்தாலும் எனக்கு ரொம்ப பிடித்த வரிகள் இது
4) முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் முயலாமை வெல்லாது

யாருடைய தனிப்பயன் செய்தி எனபது ஞாபகம் இல்லை. ஆனால் பழைய முயல் ஆமை கதையை வைத்து ஒரு நல்லக் கருத்து
5)காதல் வீட்டின் ஜன்னல் வழி அவ்வபோது எட்டி பார்க்கிறது காமம் இது மிகவும் பிரபலமான ஒருவரின் வரி

Wednesday, July 8, 2009

மழை

நின் தொடுதல் ஒரு மழை போல்
இதமான மாலை வேலையில்
கன்னம் தொடும் சின்ன தூறலாய்
ஒதுங்கி இருக்கும் வேலையில்
தேடி வந்து தொடும் சாரலாய்
எதிர்பார்த்து நிற்கும் போது
சிரித்து விட்டு செல்லும் சிறு மின்னலாய்
***************************************************************************************
நினைய
நினைக்க
தொட
விலக
சிலிர்க்க
சிரிக்க
தேவை ஒரு மழை
************************************************************************************
உன் கைக்குட்டை என் குடையாய் வர
என் விரல்கள் உன் தலை துவட்ட
வாழ்க குடை மறந்த நாட்களில் பெய்யும் மழை
************************************************************************************
மழை வந்ததும்எல்லாரும் ஜன்னல் சார்த்த
நீ மட்டும் ஜன்னல் திறக்க
புதிதாய் ரசித்தேன்
மழையையும் உன்னையும்

டாப் டென்

தப்பாய் எடுத்துகாதிங்க தொலைக்காட்சில டாப் டென் ரொம்ப பார்த்ததோட பாதிப்பு
பத்து
இரவு பத்து மணிக்கு இனிய இரவு வாழ்த்துக்களை அனுப்பிநள்ளிரவுவரை தகவல்களை பரிமாரிக்கொள்ளும் நம் அலைபேசி
ஒன்பது
போனவருட பிறந்த நாளிற்காக நீ பரிசாய் தந்தஒன்பது காதல் கவிதைகள்
எட்டு
பிரிவு தான் காதலை உணர்த்தும் என்று சொல்வார்கள்எனக்கு காதலை உணார்த்திய உன் எட்டு நாள் அலுவலக பயணம்
ஏழு
என் அழைப்பு வந்து தான் நாளை துவக்க வேண்டும் என்றுகாலை ஏழு மணிக்கு முழித்து கொண்டே படுக்கையில் உருளும் நீ
ஆறு
ஆறு சுவையில் ஒரு சுவையும் சரியாய் இல்லாமல்நான் சமைக்கும் போதும்அதையும் ரசிக்கும் நீ
ஐந்து
உள்ளங்கையில் எழுதிக்கொண்டு பலமுறை என்னால்உச்சரிக்கப்படும் உன் ஐந்து எழுது பெயர்
நாலு
ஒன்றாய் கல்லூரியில் படித்த அந்த நான்கு வருடங்கள்
மூன்று
மூன்று முடித்து நீ போட போகும் நாட்களை நினைத்துகனவு காணும் பொழுதுகள்
இரண்டு
பிறக்க போகும் நம் மழலைகளுக்காக நாம்தேர்ந்தெடுத்த இரண்டு பெயர்கள்
ஒன்று
காதலை நீ சொல்ல முடியாமல் தவிக்கஎனக்காய் உன் செடியில் பூத்த ஒற்றை ரோஜா

என் ஜன்னலில் தெரிவது நிலவு தானா?

விரைவில் ஆரம்பம்.