Sunday, December 20, 2009

என்னாச்சு......... ஒண்ணுமில்லை

இது நான் மட்டும் இல்லை பெரும்பாலும் எல்லா பெண்களும் சொல்லும் வார்த்தை. ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டு அப்புறம் ரெண்டு மணி நேரம் எதாவது பிரச்சனைய பத்தி பேசுவோம்னு பெண்களைப் பதிப் பேசுவாங்க. நாங்க ஏன் ஒண்ணுமில்லைன்னு சொல்றோம். இதை இங்கே பார்போம்.

அவள்: ஹலோ. நான் உங்கள் ஆபீஸ் வாசல்கு வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு
(இப்ப எல்லாம் பசங்க பெண்களுக்காக காத்திருப்பதில்லை.)

அவன்: இதோ வந்துட்டேன். அங்கேயே இரு.

இன்னும் பத்து நிமிஷம் கழித்து

அவள்: இன்னும் எவ்வளவு நேரம் ஆகும். செக்யூரிட்டி என்னை துரத்திகிட்டே இருக்கான்.

அவன்: இதோ வந்துட்டறேன்.

இன்னும் பத்து நிமிஷம் கழித்து வெளியே வருகிறான்

அவன்: நான் என்ன பண்றது. களம்பற நிமிஷம் தான் எல்லா வேலையும் வரது.

நம்ம பேச ஆரம்பிப்பதற்குள் இவங்க எதாவது சத்தமா சொல்லிடுவாங்க. அதை நம்ம அப்படியே கேட்டுக்கணும்

இருவருமாய் அருகில் இருக்கும் Coffee Day செல்கிறார்கள்.

அவன்: என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க?

அவள்: ஒண்ணுமில்லை

அவன்: ஒண்ணுமில்லைனாலே ஏதோ இருக்குனு தான் அர்த்தம். சொல்லு

அவள்: சொன்னா என்ன பண்ணபோறீங்க

அவன்: முதல்ல சொல்லு

அவள் ஏதோ அலுவலகத்தில் இருக்கும் பிரச்சனை பத்தி சொல்ல ஆரம்பிக்கிறாள். சரியாக ஐந்து நிமிஷம் கழித்து

அவன்: இதோ அந்த பொண்ணை பாரேன். எவ்வளவு நீளமா அழகா முடி இருக்கு. பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.

அவள்: நான் என்ன பேசிட்டு இருக்கேன் நீ எங்க கவனிக்கிற

அவன்: நான் கேட்டுக்கிட்டே தான் இருக்கேன். அப்புறம் என்ன ஆச்சு

அவள் திரும்பவும் சொல்ல ஆரம்பிக்கிறாள். சரியாக முன்று நிமிஷம் கழித்து

அவன்: இனிமே நம்ப இங்க வர வேண்டாம். ஒரு காபிக்கு நூறு ரூபாய் கிட்ட ஆகுது. உடம்புக்கு வேற இதெல்லாம் நல்லது இல்லை.

அவள்: ரொம்ப முக்கியம் இப்ப. எனக்கு ஒரு பதில் சொல்லு.


அவன்: நீ என்ன சொல்லிட்டு இருந்த. ஆரம்பத்திலிருந்து சொல்லேன் நடுவுல கொஞ்சம் கவனிக்கலை

அவள்: அவனை திட்டிவிட்டு மறுபடியும் ஆரம்பிக்கிறாள். சரியாய் இரண்டு நிமிஷம் கழித்து

அவன்: இது என்ன கருப்பு கலர்ல நைல் பாலிஷ் போட்ருக்க புள்ள பிடிக்கிறவன் மாதிரி இருக்கு.

அவள்: உன்னை என்ன பண்றதுனே தெரியல. நான் எவ்வளவு முக்கியமான விஷயம்ப் பத்தி பேசறேன்.

அவன்: உன் ஆபீஸ் பிரச்சனைக்கு நான் என்ன பண்ண முடியும். நீ தானே பார்த்துக்கணும்

அவள்: அதுக்கு தான் நான் ஒண்ணுமில்லைன்னு முதல்லியே சொன்னேன். நீ தான திரும்பவும் கேட்ட

அவன்: சரி நான் கேட்டுட்டேன். இப்ப வேற எதையாது பத்தி பேசலாம். புதுசா என்ன சமைக்க கத்துக்கிட்ட?

அவள் அவனை அசிங்கமாக திட்ட ஆரம்பிக்கிறாள்...........................
இதுக்கு தான் ஒண்ணுமில்லைன்னு முதல்லியே சொல்றோம். நீங்களா நோண்டி கேக்க வேண்டியது.அப்புறம் நீயே பார்த்துக்கோ அப்படின்னு சொல்ல வேண்டியது. எங்களையும் திட்ட வேண்டியது

இதில் வரும் அவனும் அவளும் யாரோ இருவர்கள்.

Wednesday, December 16, 2009

பிரிந்தோம்..... மீண்டும் சிந்திப்போம்

யார்யாரோ பிரிகையில் திரும்பிக் கூட
பார்க்காத இதயம்
மண்டியிட்டு அழுகிறது நீ சென்ற
தடம் பார்த்து
*************************************************************************************
எழுதி கிழித்தக் கடிதங்களும்
அனுப்பாமல் அழிக்கும் தகவல்களும் சொல்லும்
உன்னை அழைக்க முடியாமல் அழுவதை
*************************************************************************************
அடித்த அன்னையிடமே சமாதானமாகும்
குழந்தைப் போல் காத்திருக்கிறேன்
காயப் படுத்திய நீயே மருந்து போட
*************************************************************************************
தூறல் விழுந்தால் கூட உன் விரல்
வெப்பம் பழகிய நான்
புயலில் செல்ல இடமின்றி தவிக்கிறேன்
காற்றில் பறக்கும் சிறகாய்
*************************************************************************************

Thursday, December 10, 2009

எனக்குள்................

அழுகையை அடக்கிக் கொண்டு
பொய்யாய் புன்னகைக்கும் போதும்

சொல்ல நினைக்கும் வார்த்தைகளை சொல்லாமல்
எதையோ சொல்லும் போதும்

"எனக்கு அக்கறை இல்லை" என்று சொல்லி
கவலைப் பட்டுக்கொண்டு இருக்கும்போதும்

அனைத்தும் தெரிந்தும் "என்ன ஆச்சு?"
என்று கேட்க நேரும் போதும்

நம்பிக்கை இல்லாத ஒன்றை
ஊருக்காக செய்யும் போதும்

எனக்கும் எனக்கும் நடக்கும் சண்டையில்
தோர்த்து அடிபணிகிறேன் யாரிடமோ

Monday, December 7, 2009

தேடுங்க தேடுங்க தேடிக்கிட்டே இருங்க

நம்ம எல்லார் வீட்லயும் எதாவது சில பொருட்கள் தொலைந்து அதை தேடுவதற்கே பாதி நேரம் போகும். தொலையும் பொருட்கள் பெரும்பாலும் இதில் எதாவது ஒன்றாக தான் இருக்கும் ஐடென்டிடி கார்டு, வண்டியின் மாற்று சாவி , நாம் வாங்கிய பொருட்களின் வாரண்டி/காரண்டி கார்டு, கண் பரிசோதனை கார்டு, ரயில் டிக்கெட், தோடு திருகாணி மற்றும் சில. தேடுவதை எப்படி சுவாரசியமாக்குவது என்று பார்ப்போம்.

தேடுவதென்பது ஒரு டீம் வொர்க். அதை பகுதி பகுதியாய் பிரித்து செய்ய வேண்டும். ஒருவர் அலமாரி, ஒருவர் டிவிக்கும் அதன் மேல் கவுருக்கும் அடியில் இருக்கும் பகுதி இந்த மாதிரி பிரிக்க வேண்டும். ஒரு முறை மட்டும் ஒரு இடத்தை தேடினால் போதாது. மீண்டும் ஒருவர் தேடி அந்த இடம் சரியாக தேடப்பட்டுள்ளதா என்று ரெவியு செய்ய வேண்டும்.

பொருட்களை பொறுத்து அதை தேடும் விதம் அமையும். தோடு திருகாணி தொலையும் பொது தரையில் குப்பறப் படுத்து எல்லா திசைகளிலும் பார்த்து தேட வேண்டும். இதில் சோபா மற்றும் கட்டில்அடியில் கவனமாக பார்க்க வேண்டும். ரயில் டிக்கெட் தேடும் பொது அலமாரியில் இருக்கும் எல்லா காகிதத்தையும் கீழே தள்ளி விட்டு பிறகு ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்க்க வேண்டும். உயரமான ஆட்களுக்கு அலமாரி மேல் தட்டு, ஒல்லியான ஆட்களுக்கு கட்டிலுக்கு கீழ் என்று டீம் அல்லாட் செய்ய வேண்டும்.

தேடுவதற்கு என்று ஒரு டீஷிர்ட் தயார் செய்யலாம். 'Search team of the house', 'Power of Searching','You lose, We search' இந்த மாதிரி எதாவது ஸ்லோகனை பயன்படுத்தலாம். தேடும் நேரங்களில் அந்த டீஷிர்ட் அணிந்து கொண்டு தேடினால் டீம் ஸ்பிரிட் நன்றாக இருக்கும். தேடுவதற்கு முன் இந்திய கிரிக்கெட் அணி செய்வது போல எல்லாரும் வட்டமாக நின்று கட்டிபிடிக்க வேண்டும். தொலைந்த பொருளை தேடி எடுத்தவருக்கு 'Star searcher of the house' என்ற அவார்ட் கொடுத்து உற்சாகப் படுத்துவது முக்கியம் .தேடிய பொருள் கிடைத்த உடன் அதை வைத்துக் கொண்டு டீம் போட்டோ எடுத்துக் கொண்டு அதை வீட்டில் மாட்ட வேண்டும்.தேடுதலை உற்சாகப் படுத்த டீம் லஞ்ச், டின்னர் சென்று பாண்டிங் இம்ப்ரூவ் செய்வது முக்கியம்

வெற்றிகரமாக தேடி முடித்தப்பின் எங்கு எந்த பொருள் கிடைத்தது என்று ஒரு எக்ஸ்செல் ஸீட்டில் குறித்து வைக்க வேண்டும். உதாரணமாக ரயில் டிக்கெட் இரண்டு பால் கார்டுக்கு நடுவில் நான்காக மடித்து இருந்தது. இவ்வாறு செய்து ரூட் காஸ் அனாலிசிஸ் அதாவது ஏன்
பொருள்கள் தொலைகிறது என்று யோசிக்க வேண்டும்.

சரி நானும் போய் என் எக்ஸாம் ஹால் டிக்கெட் தேடி விட்டு வருகிறேன்