Tuesday, August 11, 2009

நிச்சியதார்த்தம்

கனவால் கழுவப்பட்ட கண்கள்
புன்னகை நிறைந்த உதடுகள்
ஆசையால் கிள்ளப்பட்ட தேகம்
ஆனந்தத்தில் கூத்தாடும் இதயம்

முதல் மாலையை சுமக்க
போகின்றன என் தோள்கள்
எனக்கான முதல் மேடையை
சந்திக்கப் போகின்றன என் கால்கள்


இன்றோடு முடிந்தன
என் தனிமை தினங்கள்
காதலில் நகரப் போகின்றன
இனி என் நாட்கள்

எதிர்பார்ப்புகள் எட்டி பார்க்க
தொடங்கியது திருமண நிச்சயதார்த்தம்
இனிதாய் ஆரம்பமானது என்
வாழ்வின் இரண்டாம் அத்தியாயம்

Thursday, August 6, 2009

கேள்விகளும் நானும்

*1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?*

பிறந்த ஊர் கும்பகோணம். கும்பகோணத்தில் இருக்கும் உப்பிலியப்பன் கோவில தாயார் பெயரான பூமா எனக்கும் வைக்க பட்டது.

உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?*

அவ்வளவா பிடிக்காது

2. கடைசியாக அழுதது எப்பொழுது?*

நேற்று பொதுவா நிறைய அழுவது கிடையாது. ஆனா நிறைய பிரச்சனைகள் உண்டு. நேற்று எல்லாத்துக்கும் சேர்த்து வைத்து அழுதேன்

3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?*

பிடிக்காது. ரொம்ப மோசமா இருக்கும்

*4. பிடித்த மதிய உணவு என்ன?*

நிறைய பிடிக்கும். ஆனா அம்மா சமைக்கிற ரசமும் கீரையும் ரொம்ப பிடிக்கும் *5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?*

அப்படி இல்லை. சில நபர்களிடம் அப்படி செய்து இருக்கிறேன். அந்த நட்பும் நல்லபடியாய் நிலைத்து இருக்கிறது

*6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?*

கடலில் கால் நனைததுண்டு. அது ரொம்ப சுகமா இருக்கும். அருவிய பார்க்க பிடிக்கும்

7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?*

அதிகம் சிரிக்கிறாரா இல்லையா என்று. அதிகம் சிரிப்பவரை நம்புவது இல்லை.

8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விடயம் என்ன? பிடிக்காத விடயம் என்ன? *

பிடித்தது: நான் எதை ஏன் செய்கிறேன் என்கிற தெளிவு உண்டு. அதிகமாய் உடைந்தது இல்லை. முடிந்தவரை ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்

பிடிக்காதது: நிறைய உண்டு. சில சமயம் சில மனிதர்களிடம் உண்மையை பேச முடியாமல் தயங்குவது. சில நபர்களை பார்த்தாலே வரும் கோபம். சில சமயங்களுக்காக வேஷம் போடுவது

*9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்கள் என்ன?*

மிகவும் தெளிவாய் யோசிப்பது

*10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?*

அப்படி யாருககவும் வருந்தவில்லை

*11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?*

நீலம்

*12. என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?*

நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?

எப்போதுமே கருப்பு தான் பிடிச்ச கலரு

*14. பிடித்த மணம்?*

மண் வாசனை. வறுக்கும் காபி வாசம். புதிய பேப்பர் வாசம் இந்த மாதிரி நிறைய

*15. நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?*

என் தோழி அருணா. எதையும் அலசி பார்ப்பாள். காரணம் வைத்து கொண்டு நாங்கள் அழைப்பதில்லை காரணம் இல்லாமல் அழைத்து நீ சொல்லு நான் சொல்லு என்று ஊர் கதைகள் பேசுவோம் ராஜி. சில நாட்களை அவளுக்கு கொஞ்சம் பிரச்சனை. அழைக்க போவது சினமாவுக்கு போகலாமா என்று கேட்க
*16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு*

அதிகமாய் பழக்கமில்லை என்றாலும் அவங்க கவிதைகள் ரொம்ப பிடிக்கும் 17. பிடித்த விளையாட்டு?*

சீண்டி பார்ப்பது

*18. கண்ணாடி அணிபவரா?*

ஆமாம் ஆறு வயதிலிருந்து அணிகிறேன்

*19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?*

அதிக ஆர்பாட்டம் இல்லாமல் யதார்த்தமாய் இருக்கும் படங்கள் பிடிக்கும்.

20. கடைசியாகப் பார்த்த படம்?*

நாடோடிகள்

21. பிடித்த பருவகாலம் எது?*

மழை காலம் தான்.

*22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?*

master detective என்னும் புத்தகம்

*23. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்?

நல்ல படங்கள் கிடைத்த உடன் மாற்றி விடுவேன்

24. உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?*

பிடித்தது பறவைகள் சத்தம். அப்புறம் ராத்திரில அமைதியா ஒலிக்கிற பாடல் சத்தம்

பிடிக்காதது:அந்த சைனீஸ் படத்தை தமிழ்ல மாத்தி அதுல அவங்க பேசற சத்தம்

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?

லண்டன்

26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?*

இருக்கே. அது என்னனு தான் இன்னும் தெரியல

*27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்?*

பொது எடங்களில் குப்பை போடுபவர். குறிப்பை பேருந்து மற்றும் ரயில்களில். வரிசையில் நிற்காமல் அடுத்தவர்களை விட்டு டிக்கெட் வாங்கி தர சொல்லுபவர்கள்
*28. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?*

எல்லாரிடத்திலும் தப்பு கண்டு பிச்சு மனசிலயே வெச்சுக்கும்

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?*

கேரளா போக வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை

*30. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?*

எப்பவும் சிரிச்சிண்டு இருக்கணும், எப்பவும் எதாவது வேலை செஞ்சுண்டே இருக்கணும்,

*31.கணவர் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?*

இதுவரை அப்படி யாரும் இல்லை.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.

நிறைய சமயம் பரீட்சை வெச்சுட்டு தான் பாடத்தை சொல்லி தரும்