இப்ப சில மாதங்களாய் கல்லூரி தோழி ஒருத்தி என் அலுவலகத்திலே பணிபுரிவதாலும் ,
தனிமை நேரங்கள் அதிகரிப்பதாலும் ரொம்பவே அசை போடுகிறேன் கல்லூரி நாட்களை. நிறைய விஷயங்கள் செய்ய ஆரம்பிச்சது கல்லூரி நாட்களில் தான்.
எங்க குடும்பம் நான் பத்தாவது படிக்கச்சே சென்னை வந்தாலும் எனக்கு என் கல்லூரி நாட்கள் வரை சென்னையில் அதிகமாய் எந்த இடமும் தெரியாது. கல்லூரி நாட்களில் ஊர் சுத்தும் பொது தான் சென்னையை முழுவதுமாய் தெரிஞ்சுக் கொள்ள முடிஞ்சது.
நான் கவிதை எழுதறேன்னு சொல்லி கிறுக்க ஆரம்பித்தது கல்லூரி நாட்களில் தான். நிறைய கவிதை புத்தகங்களை படிச்சது, மற்றும் ஒருவரின் மீது கொண்ட ஒரு தலை காதல் தான் இதற்கு முக்கிய காரணம். அப்ப என் நோட் புக்ஸில் பாட சம்மந்தமான விஷயங்களை விட, கவிதை தான் நிறைஞ்சு இருக்கும்.
அதுக்கு அப்புறம் நான் இரு சக்கிர வாகனம் ஓட்ட ஆரம்பிச்சது கல்லூரிக்கு போவதற்கு தான். அதுக்கு முன்பு வாகனம் ஒட்டவே தெரியாது. எங்க வீட்டிலிருந்து கல்லூரிக்கு போக சரியாய் பேருந்து வசதி இல்லாததால் தான் விழுந்து வாரி வண்டி ஓட்ட கத்துண்டேன். அப்படி ஒரு முறைஎருமை மாட்டின் மீது வண்டி மோதி அடிபட்ட நேரம் தான் எனக்கும் ராஜிக்கும் நட்பு ஆரம்பமாச்சு.
டைரி எழுதும் பழக்கம் உருவெடுத்ததும் இந்த நாட்களில் தான். அதுக்கு முன்னாடி டைரில
என்ன எழுதறது , எழுதியதை யாராவது படிச்சா என்ன ஆகும் இத நினைச்சே ஒன்னும் எழுத மாட்டேன். அந்த வருடங்களின் டைரிகளை வெச்சே நாலு தமிழ் படம் பண்ணலாம். நட்பு, காதல், உலகம் புரிதல், ஏமாற்றம் இப்படி பல விஷயம் அதுல உள்ளடக்கம்.
இந்த வலைப்பூ மூலம் என் ஜன்னலில் எனக்கு தெரிவதை பற்றி எழுத போகிறேன். என் கருத்துகளை பதிப்பதற்கு விவாதிப்பதற்கு இது ஒரு மேடையாய் இருக்கும் என நினைக்கிறன். மறக்காமல் குறை நிறைகளை எழுதுங்கள்
Sunday, November 22, 2009
Saturday, November 21, 2009
எதிர்த்துப் பேசுவேன்
First impression is the best impression: இதில் என்னவோ என்னக்கு உடன்பாடு இல்லை.பொதுவாய் முதலில் ஒருவரை பார்க்கும் போது நாம்(முக்கியமாக நான்) நாமாய் இருப்பது இல்லை.ஒருவரோடு தொடர்ந்து பழகும் போது தான் அவரின் சுயரூபம் அறிகிறோம். ஆளை பார்த்துஎடை போடுவதில் நாம் எப்போதும் தவறி இருக்கிறேன்
Desire is the rootcause of all evils: என்னை பொறுத்தவரை ஆசை இல்லாமல் நாம்எல்லாம் ஒரு மரக்கட்டைக்கு சமானம். நியாமான வழியில் ஆசையை அடைவதில் என்ன தீமைஇருக்கிறது
Silence is Golden: மௌனங்களை நாம் வெவ்வேறு வகையில் மொழிபெயர்க்கிறோம். இப்போது ஒருபொருள் தந்து பிறகு வேறு பொருள் தரும் மௌனத்தை விட வார்த்தைகளே சிறந்தது.
Desire is the rootcause of all evils: என்னை பொறுத்தவரை ஆசை இல்லாமல் நாம்எல்லாம் ஒரு மரக்கட்டைக்கு சமானம். நியாமான வழியில் ஆசையை அடைவதில் என்ன தீமைஇருக்கிறது
Silence is Golden: மௌனங்களை நாம் வெவ்வேறு வகையில் மொழிபெயர்க்கிறோம். இப்போது ஒருபொருள் தந்து பிறகு வேறு பொருள் தரும் மௌனத்தை விட வார்த்தைகளே சிறந்தது.
Subscribe to:
Posts (Atom)