Tuesday, August 11, 2009

நிச்சியதார்த்தம்

கனவால் கழுவப்பட்ட கண்கள்
புன்னகை நிறைந்த உதடுகள்
ஆசையால் கிள்ளப்பட்ட தேகம்
ஆனந்தத்தில் கூத்தாடும் இதயம்

முதல் மாலையை சுமக்க
போகின்றன என் தோள்கள்
எனக்கான முதல் மேடையை
சந்திக்கப் போகின்றன என் கால்கள்


இன்றோடு முடிந்தன
என் தனிமை தினங்கள்
காதலில் நகரப் போகின்றன
இனி என் நாட்கள்

எதிர்பார்ப்புகள் எட்டி பார்க்க
தொடங்கியது திருமண நிச்சயதார்த்தம்
இனிதாய் ஆரம்பமானது என்
வாழ்வின் இரண்டாம் அத்தியாயம்

2 comments:

  1. வாழ்த்துகள் பூமா!

    --
    ப்ரியத்துடன்,
    கோகுல்

    ReplyDelete