Sunday, November 22, 2009

Rewind

இப்ப சில மாதங்களாய் கல்லூரி தோழி ஒருத்தி என் அலுவலகத்திலே பணிபுரிவதாலும் ,
தனிமை நேரங்கள் அதிகரிப்பதாலும் ரொம்பவே அசை போடுகிறேன் கல்லூரி நாட்களை. நிறைய விஷயங்கள் செய்ய ஆரம்பிச்சது கல்லூரி நாட்களில் தான்.

எங்க குடும்பம் நான் பத்தாவது படிக்கச்சே சென்னை வந்தாலும் எனக்கு என் கல்லூரி நாட்கள் வரை சென்னையில் அதிகமாய் எந்த இடமும் தெரியாது. கல்லூரி நாட்களில் ஊர் சுத்தும் பொது தான் சென்னையை முழுவதுமாய் தெரிஞ்சுக் கொள்ள முடிஞ்சது.

நான் கவிதை எழுதறேன்னு சொல்லி கிறுக்க ஆரம்பித்தது கல்லூரி நாட்களில் தான். நிறைய கவிதை புத்தகங்களை படிச்சது, மற்றும் ஒருவரின் மீது கொண்ட ஒரு தலை காதல் தான் இதற்கு முக்கிய காரணம். அப்ப என் நோட் புக்ஸில் பாட சம்மந்தமான விஷயங்களை விட, கவிதை தான் நிறைஞ்சு இருக்கும்.

அதுக்கு அப்புறம் நான் இரு சக்கிர வாகனம் ஓட்ட ஆரம்பிச்சது கல்லூரிக்கு போவதற்கு தான். அதுக்கு முன்பு வாகனம் ஒட்டவே தெரியாது. எங்க வீட்டிலிருந்து கல்லூரிக்கு போக சரியாய் பேருந்து வசதி இல்லாததால் தான் விழுந்து வாரி வண்டி ஓட்ட கத்துண்டேன். அப்படி ஒரு முறைஎருமை மாட்டின் மீது வண்டி மோதி அடிபட்ட நேரம் தான் எனக்கும் ராஜிக்கும் நட்பு ஆரம்பமாச்சு.

டைரி எழுதும் பழக்கம் உருவெடுத்ததும் இந்த நாட்களில் தான். அதுக்கு முன்னாடி டைரில
என்ன எழுதறது , எழுதியதை யாராவது படிச்சா என்ன ஆகும் இத நினைச்சே ஒன்னும் எழுத மாட்டேன். அந்த வருடங்களின் டைரிகளை வெச்சே நாலு தமிழ் படம் பண்ணலாம். நட்பு, காதல், உலகம் புரிதல், ஏமாற்றம் இப்படி பல விஷயம் அதுல உள்ளடக்கம்.

2 comments:

  1. சரி சரி.. டைட்டில் போட்டது போதும். எப்போ படத்தை ஆரம்பிக்க போறே?

    ReplyDelete
  2. கொஞ்சம் கொஞ்சமா தான் கதை சொல்ல முடியும்

    ReplyDelete