அழுகையை அடக்கிக் கொண்டு
பொய்யாய் புன்னகைக்கும் போதும்
சொல்ல நினைக்கும் வார்த்தைகளை சொல்லாமல்
எதையோ சொல்லும் போதும்
"எனக்கு அக்கறை இல்லை" என்று சொல்லி
கவலைப் பட்டுக்கொண்டு இருக்கும்போதும்
அனைத்தும் தெரிந்தும் "என்ன ஆச்சு?"
என்று கேட்க நேரும் போதும்
நம்பிக்கை இல்லாத ஒன்றை
ஊருக்காக செய்யும் போதும்
எனக்கும் எனக்கும் நடக்கும் சண்டையில்
தோர்த்து அடிபணிகிறேன் யாரிடமோ
Naiceeeeee!
ReplyDelete