Sunday, December 20, 2009

என்னாச்சு......... ஒண்ணுமில்லை

இது நான் மட்டும் இல்லை பெரும்பாலும் எல்லா பெண்களும் சொல்லும் வார்த்தை. ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டு அப்புறம் ரெண்டு மணி நேரம் எதாவது பிரச்சனைய பத்தி பேசுவோம்னு பெண்களைப் பதிப் பேசுவாங்க. நாங்க ஏன் ஒண்ணுமில்லைன்னு சொல்றோம். இதை இங்கே பார்போம்.

அவள்: ஹலோ. நான் உங்கள் ஆபீஸ் வாசல்கு வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு
(இப்ப எல்லாம் பசங்க பெண்களுக்காக காத்திருப்பதில்லை.)

அவன்: இதோ வந்துட்டேன். அங்கேயே இரு.

இன்னும் பத்து நிமிஷம் கழித்து

அவள்: இன்னும் எவ்வளவு நேரம் ஆகும். செக்யூரிட்டி என்னை துரத்திகிட்டே இருக்கான்.

அவன்: இதோ வந்துட்டறேன்.

இன்னும் பத்து நிமிஷம் கழித்து வெளியே வருகிறான்

அவன்: நான் என்ன பண்றது. களம்பற நிமிஷம் தான் எல்லா வேலையும் வரது.

நம்ம பேச ஆரம்பிப்பதற்குள் இவங்க எதாவது சத்தமா சொல்லிடுவாங்க. அதை நம்ம அப்படியே கேட்டுக்கணும்

இருவருமாய் அருகில் இருக்கும் Coffee Day செல்கிறார்கள்.

அவன்: என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க?

அவள்: ஒண்ணுமில்லை

அவன்: ஒண்ணுமில்லைனாலே ஏதோ இருக்குனு தான் அர்த்தம். சொல்லு

அவள்: சொன்னா என்ன பண்ணபோறீங்க

அவன்: முதல்ல சொல்லு

அவள் ஏதோ அலுவலகத்தில் இருக்கும் பிரச்சனை பத்தி சொல்ல ஆரம்பிக்கிறாள். சரியாக ஐந்து நிமிஷம் கழித்து

அவன்: இதோ அந்த பொண்ணை பாரேன். எவ்வளவு நீளமா அழகா முடி இருக்கு. பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.

அவள்: நான் என்ன பேசிட்டு இருக்கேன் நீ எங்க கவனிக்கிற

அவன்: நான் கேட்டுக்கிட்டே தான் இருக்கேன். அப்புறம் என்ன ஆச்சு

அவள் திரும்பவும் சொல்ல ஆரம்பிக்கிறாள். சரியாக முன்று நிமிஷம் கழித்து

அவன்: இனிமே நம்ப இங்க வர வேண்டாம். ஒரு காபிக்கு நூறு ரூபாய் கிட்ட ஆகுது. உடம்புக்கு வேற இதெல்லாம் நல்லது இல்லை.

அவள்: ரொம்ப முக்கியம் இப்ப. எனக்கு ஒரு பதில் சொல்லு.


அவன்: நீ என்ன சொல்லிட்டு இருந்த. ஆரம்பத்திலிருந்து சொல்லேன் நடுவுல கொஞ்சம் கவனிக்கலை

அவள்: அவனை திட்டிவிட்டு மறுபடியும் ஆரம்பிக்கிறாள். சரியாய் இரண்டு நிமிஷம் கழித்து

அவன்: இது என்ன கருப்பு கலர்ல நைல் பாலிஷ் போட்ருக்க புள்ள பிடிக்கிறவன் மாதிரி இருக்கு.

அவள்: உன்னை என்ன பண்றதுனே தெரியல. நான் எவ்வளவு முக்கியமான விஷயம்ப் பத்தி பேசறேன்.

அவன்: உன் ஆபீஸ் பிரச்சனைக்கு நான் என்ன பண்ண முடியும். நீ தானே பார்த்துக்கணும்

அவள்: அதுக்கு தான் நான் ஒண்ணுமில்லைன்னு முதல்லியே சொன்னேன். நீ தான திரும்பவும் கேட்ட

அவன்: சரி நான் கேட்டுட்டேன். இப்ப வேற எதையாது பத்தி பேசலாம். புதுசா என்ன சமைக்க கத்துக்கிட்ட?

அவள் அவனை அசிங்கமாக திட்ட ஆரம்பிக்கிறாள்...........................
இதுக்கு தான் ஒண்ணுமில்லைன்னு முதல்லியே சொல்றோம். நீங்களா நோண்டி கேக்க வேண்டியது.அப்புறம் நீயே பார்த்துக்கோ அப்படின்னு சொல்ல வேண்டியது. எங்களையும் திட்ட வேண்டியது

இதில் வரும் அவனும் அவளும் யாரோ இருவர்கள்.

3 comments:

  1. ஹாஹாஹா! சூப்பரு!

    ReplyDelete
  2. //இதில் வரும் அவனும் அவளும் யாரோ இருவர்கள்.//
    :-)))

    ReplyDelete
  3. முடியல...... மொத்தத்தில் ஒரு பி எச் டி பண்ணியிருக்கீங்க.

    ReplyDelete